Posts tagged சாரு
ஊரின் மிக அழகான ஆணும்,வெள்ளை நாய்குட்டியும் மற்றும் நானும்
Aug 29th
சனிக்கிழமை அவசரமான வேலை வந்து விட்டது.இல்லையென்றால் காலையிலே சென்றிருப்பேன் பனையூருக்கு.மாலை 5 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.நீலாங்கரையை நெருங்கும்போது தூறல்.சிறிய பதட்டம்.மாலையும் முன்னிரவும் சந்திக்கும் அந்திமாலை நேரத்தில்தான் நான் அன்பானவர்களுடன் இருக்க ஆசைப்படும் நேரம்.நல்லவேளை தூறல் நின்று, என் அன்பு எழுத்தாளர் சாருவுடன் அந்த நேரத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.மழைக்கு நன்றி.
நான் நுழைந்தபோது கண்ட காட்சியை இப்போதும் நினைத்து ரசிக்கிறேன்.கல்யாண வீடு போல் இருந்தது.வரவேற்பு,கைகுலுக்கல்,உள்ளே சீனு மேற்பார்வையில்,காய்கறி வெட்டிக்கொண்ட்டிருந்தார்கள்(ஸலாதுக்கு) நாலு பேர்.
நீச்சல் குளத்தில் வில்லன்,பாஸ்கர்,செல்வம் கும்பல் அதகளம் செய்து கொண்டிருந்தது.ஒரு பக்கம் சாருவின் எழுத்துக்களை வைத்து விவாதம்.இந்த களேபரத்திற்கு இடையில் ஒரு அழகான வெள்ளை நாய்க்குட்டி சோஃபாவில் தூங்கிக்கொண்டிருந்தது.எந்த பதட்டமும் இல்லை அதற்கு.எங்களை போன்ற அராத்துகளின் துணையை அது மிகவும் விரும்பியிருக்க வேண்டும்.
சிறிது நேரத்தில் சாரு நீச்சல் குளத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.பகார்டி,ரெமி மார்ட்டின், ஒலிவ் காய்கள்,கிரீன் ஆப்பிள் சகிதம் இலக்கிய விவாதம் ஆரம்பம்….
நான் சில நாட்களுக்கும் முன்னால் டெல்லி சென்றபோது மயூர் விஹார்,கன்னாட் பிளேஸ்,ராஜிவ் சவுக்,திரிலொக்புரி முதலிய இடங்களுக்கு செல்லும் போது சாருவும் என்னுடன் கூடவே பயணித்தார்.அவரின் பல அற்புதமான சிறுகதைகளில் டெல்லி ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இருக்கிறது.மிதமான போதையில் நீச்சல் அடித்துக்கொண்டே இதை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.டெல்லி என்று சொன்னதும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் இருந்ததை உணர முடிந்தது.
பிறகு பேச்சு exile,காமரூப கதைகள் என்று மாறியது.ஊரின் மிக அழகான பெண் என்றதும், கவிதாயினி தமிழச்சி தங்க பாண்டியனை பற்றி பேச்சு மாறியது.நான் ஊரின் மிக அழகான ஆண்?? யார் என்று கேட்டதும்
மொத்த கும்பலும் சொன்னது “சாரு நிவேதிதா”. தெத்துப்பல் சிரிப்பும்,வெண்தாடியும்..attractive.
உயிர்ம்மை விழாவில் சாருவுக்கு மோதிரம் போட்ட நாகராஜன் எங்களுடன் இணைந்துகொண்டார்.
8 மணிக்கு அடுத்த அமர்வு ஆரம்பித்தது, ஜீரோ டிகிரி,ராசலீலா விலிருந்து ஆரம்பித்த விவாதம் ஷேக்ஸ்பியரில் நிலைகொண்டது.ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.நான் என் ரத்த நாளங்களில் ஒடிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.எப்படி அவர் என் சிந்தனை,எழுத்து,enrichment of my sensibility,வாழ்வுமுறை,நட்பு போன்றவற்றில் எவ்வாறு பாதிப்பை நிகழ்த்தினார் என்று அவர் படைப்புகளில் வரும்,வந்த keywords சிலவற்றை பகிர்ந்து கொண்டேன்.
பிறகு மது,நடனம்,மது,நடனம்.
சளைக்காமல் எங்களுடன் தாளத்தின் லயத்திற்கேற்ப சாருவின் நடனம் அட்டகாசம்….connoisseur...
சில தமிழ் குத்து பாடல்களுக்கு ஆடியதில்,ஆட விட்டதில் எனக்கும் உவகையில்லை.அடுத்த சந்திப்பில் இதையும் கச்சிதமா ஏற்பாடு செய்வோம்.நடனம் ஆடும் ஆர்வத்தில் பலர் சாப்பிடவே இல்லை.கிச்சனில் உணவு அப்படியே இருந்தது.எல்லோருக்கும் உணவு கொண்டு சென்று (வலுக்கட்டாயமாக) சாப்பிட வைத்தேன்.சாரு,சீனிவாசன் இருவரும் தயிர்சாதம் பக்கம் போய்விட்டனர். நாய்குட்டி சாப்பிட்டதா என்று தெரியாததால் அதற்கும் உணவு எடுத்து எழுப்பினேன்.அது சிறிது சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டி,என் கையை நாக்கால் நக்கிவிட்டு தூங்கி விட்டது.ஒரு குழு போட்டது விடியும் வரை ஆட்டம்.கெட்ட ஆட்டம்.
இந்த சந்திப்பு மிக அழகாக திட்டமிடப்பட்டு நடந்திருக்கிறது.மகிழ்ச்சி!!
ஏன் எனக்கு சாருவை இவ்வளவு பிடிக்கிறது??
ஏனென்றால் நான் தான் சாரு.
என்னுடைய குணாதிசயங்கள் அப்படி.எந்தவித தரத்தையும் நாடாத தமிழ் வாழ்வில் சாரு கலகக்காரனாகத்தான் இருக்க முடியும்.
எருமைச்சாணியை போன்ற தமிழ் சினிமா(கோணல் பக்கங்கள்),காதை கிழிக்கும் இசை,மது பானம் என்ற பெயரில் கழுதை மூத்திரம்…இப்படி இருக்கும் தமிழ் வாழ்வில் கதையோ,கட்டுரையோ சாருவின் குரல் தனித்து தான் ஒலிக்கிறது.
சாருவை வெருப்பவர்கள் தான் அவரை விரும்புபவர்களை விட அதிகமாக நினைக்கிறார்கள்.நானைல்லாம் ஒன்றும் இல்லை சாருவின் மற்ற fanatics முன்னால்.கடைசியாக இரண்டே விஷயம்.பாரதி படத்தில் பாரதியை காட்டி காந்தி சொல்வதாக ஒரு வசனம் வரும் “இவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்”.சாருவை பத்திரமாக பார்த்துக்கொள்வது நம் கடமை.இந்த வயதில் அவர் தன்னை காதலித்து பராமரிக்கும் விஷயம்,உழைப்பு மற்றும் எழுத்துக்காண அற்பணிப்பு..Inspiring..
சுஜாதா தமிழை 18 வயது பெண்ணை போல மாற்றினார்.சாரு தமிழை 13 வயது பெண் போல் மாற்றியிருக்கிறார்.Pleasure of Text விஷயத்தில் சாருவைப்போல் சுவாரஸ்யமான எழுத்தாளர் உலகிலேயே மிகக்குறைவு.
பி.கு:
அடுத்த சந்திப்பிற்கு முன்னால் சாருவின் புத்தகங்கள் ஒன்று விடாமலும்,ஃபோர்ஹேஸ்,ழார் பத்தாயின் கண்ணின் கதை,சார்த்தரின் being and nothingness,மார்கேஸ் ஆகியவற்றையும் படித்து முடித்திருப்பேன்.அப்படி இல்லையென்றால் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.



Recent Comments