Litrature
Litrature
Vannadhasan
Dec 13th
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
- Vannadhasan @ Kalyanji
வண்ணதாசன் கேணி சந்திப்பு பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என
–வண்ணதாசன்
Tamil sites i frequently visit
Jun 20th
Keetru :
Writer Charu nivedita’s Site :
Writer Jeyamohan’s Own Blog :
Kalachuvadu Magazine :
and also
s.ramankirushnan’s
Popular magazine uyirmmai will upload the content near future
ஒரு தேவதையின் பார்வை
Jun 5th
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.
சிறிய மனிதர்களை வாகனங்களில்
பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்
பெரிய மனிதர்கள்.
கடந்து செல்லும் பாதையில்
மரமொன்று இலைகளை உதிர்த்துவிட்டு
தலை முழுதும் பூக்களோடு
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக வாகன இரைச்சல்களால்
பதட்டமான கண்களோடு நடக்கும்
பசு ஒன்று..ஜென் துறவியைப்போல்
ஆழ்ந்த சிந்தனையில் நின்றுகொண்டிருக்கிறது
மைதானத்தில் கால்பந்து விளையாடும்
சிறுவர்களில் ஒருவனின் சிரிப்பு
என் பால்ய நண்பனின் சிரிப்பைப்போல
வசீகரமாயிருக்கிறது..
காலி செய்யப்பட்ட பூக்கடையிலிருந்து
மிச்சமிருக்கும் வாசணை
காற்றில் அலைகிறது
நான் முன்னே சொன்னது போல்
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.
I was in Jeffrey Archer’s bangalore Landmark visit
May 28th
Saturday : 23rd Evening Landmark,Forum Mall,bangalore
we, fans who have long read his books and couldn’t wait to catch a glimpse of our favourite author, Archer interacted with us for a good 60 minutes at Landmark book store in Forum Mall,Bangalore at Saturday evening before signing copies of his latest book, “A Prisoner of Birth”.My favourite : Shall we tell the presidentHis Favourite : Kane and Abel.
தொலைத்தல் – ஒரு எளிய அறிமுகம்
May 1st
தொலைத்தல் என்பது என்ன? நம்மிடம் தற்காலிகமாக வந்து சேரும் ஒன்று பிரிந்து மூலத்திற்கோ,பிற இடத்திற்கோ இடம் பெயர்தல் என்று எடுத்துக்கொள்ளலாமா?
சிறு வயது முதல் ஏதோ ஒன்றை எப்போதாவது தொலைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.
சிறிய வயதில் சிங்கப்பூர் மாமா கொடுத்த இரவில் ஒளிரும் பந்து ஒரு நாளின் காலையில் தொலைந்து போனது.சிலேட்டுக்குச்சி,சின்ன ரப்பர் செருப்பு,பாதி ஒடிந்த பென்சில்,மூன்றாம் வகுப்பில் வருடத்தின் ஆரம்பத்திலேயே தொலைந்து போன தமிழ் புத்தகம்,பெரிய வகுப்பில் நிறைய பேனாக்கள்,ஒரு நாளின் அதிகாலையில் என் அம்மா,டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாளின் பிற்பகளில் என் முதல் காதலி,பல அன்பான தோழர்கள்,சில ரகசிய சினேகிதிகள்,எப்போதோ என் வெகுளித்தனம்,கல்லூரி நாட்களில் கால்குலேட்டர்,முதன் முறையாக உபயோகப்படுத்திய செல்போன் இப்படி நான் தொலைத்தவைகளின் வரிசை அடைந்தவைகளின் வரிசையை விட மிக நீண்டதாக இருக்கிறது.
தொலைத்து விட்டோம் என்பதை அறியும் அந்த நொடி மிக வினோதமானது.சில நிமிட தேடல்களுக்குப்பின் உறுதி செய்யப்படும் போது மனம் ஒரு கொடுங்கனவினை காண்பது போன்ற பதபதைப்பிற்க்கு உள்ளாகியிருக்கும்.
எந்த ஒரு தருணத்துடனும் ஒப்பிட இயலாதது தொலைத்ததை உணரும் தருணம்.
வெகு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளூம் வியர்வையும்,படபடப்பும் ஒவ்வொரு முறையும் புதியது.
ஏதோ ஒன்றை அடைவதைப் போல் இல்லை ஏதோ ஒன்றை தொலைப்பது அல்லது இழப்பது.
வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வாய் அது இருக்கிறது.தொலைத்தபின் அதை தேடும் அந்த நிமிடங்கள் ஒரு சாகச சினிமாவைபோன்றது.தொலைத்தது மிக அரிதாக சில சமயங்களில் கிடைத்துவிடும், அப்போது உதிற்கும் புன்னகை எப்பொழுதும் யாராலும் ஒளிப்பதிவு செய்யப்படாதது.Children of Heaven என்று ஓர் இரானியன் சினிமா தொலைத்தலின் கொடுர அனுபவத்தை இரக்கமில்லாமல் விவரிக்கிறது.தன் தங்கையின் ஷூவைத்தொலைத்துவிடும் ஒரு சிறுவன் அதை தேடி அலையும் இருவரின் சில நாள் வாழ்க்கை, தொலைத்தல் எத்தனை ரணமானது என்பதை காட்சிப்படுத்தியிருந்தது.Italian “BYCYCLE THIEVES”ல், புது சைக்கிள் வாங்கி உற்சாகமாக வேலைக்குச்செல்லும் ஒருவனின் சைக்கிள் அன்றே திருடப்பட்டு விடுகிறது.அதை தன் மகனுடன் தேடி அலைவதும், கடைசியில் நடக்கும் நிகழ்வுகளும் பார்வையாளனின் இரத்தநாளங்களை அறுப்பவை.
இப்படி நம்மை சுற்றி தொலைத்தவைகளின் கதைகள் அதிகம்.வரும் நாட்களில் பதிவு செய்வதாக உத்தேசம்.
வெயில் புணரும் பெருநகரம்
Apr 15th
சென்னையில், ஒரு விடுமுறை நாளின் பகற்பொழுதில்
மிக வேகமாய் நிகழ்ந்தது அந்த வெளியேற்றம்.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த
காதலியின் இருக்கமான அணைப்பில்,
கிழக்கு கடற்கரைசாலையில் வேகமான பயணம்.
வெயில் எங்கள் உடலில் அப்பியிருந்தது.
கடற்காற்று இருவருக்கும் இடையில் புகுந்து
வெளியேற எத்தனித்தது.
உதடுகள் உலர்ந்துபோய்,மெளனமாய் பரிமாரப்பட்ட
ஒரு முத்தம் உப்புகரித்தது.
தார்சாலையின் கருப்புக்கும்
நடுவே இருந்த மஞ்சள் கோட்டுக்கும்
வெயில் நிறையவே பழக்கமாயிருந்தது.
பசுமாடுகளின் ஆழ்ந்த மொளனமும்
சவுக்குத்தோப்பை நோக்கிய வேகமான நடையும்
வெயில் மிக எளிதில் பழக இயலாத ஒன்றென புரிந்தது.
இருவரும் கைகளை கோர்த்தபோது
உள்ளங்கையின் வியர்வைத்துளிகள்
புதிய வாசனையை உண்டாக்கியிருந்தன.
காலில் செருப்பில்லாமல் தலையில் முக்காடுபோட்டு நடந்துபோன
வயதானவளுக்கு..கண்டிப்பாக தீராத வெறுப்பிருக்கும்
வெயிலின் மீதோ அல்லது வாழ்க்கையின்மீதோ!
ஏன்? இல்லாமல் கூட இருக்கலாம்.
வெயிலின் இரக்கமில்லா உக்கிரத்தை,
அனுபவிக்கும் வலியான சூட்டை, வாழ்க்கையின் அந்த நிமிடத்தை
அவள் ரசித்துக்கொண்டே நடந்திருக்கலாம்.
யார் கண்டார்?
வாழ்க்கையைப்பற்றிய நினைவு வந்ததும்,
பெருநகரத்தைப்பற்றிய நினைவும் வந்துவிடுகிறது.
பெருநகரத்தை நெருங்க நெருங்க
வெயில் தன் புணர்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருந்தது.
வாகனங்களின் அலறல் சத்ததோடு வரவேற்றது எங்களை
வெயில் புணரும் பெருநகரம்.






Recent Comments