மறந்துவிட்டாயா அம்மா

அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..

விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..

எங்கே அம்மா மழை ?..

************

கண்ணீர் வழிந்து,

 காய்ந்துபோன தடத்தில்,

முத்தங்கள் வழிநெடுக..