சொல்லத் துடிக்குது மனசு – 2
மதிப்பீடுகள் வீழ்ந்து கிடக்கும் தமிழ் வாழ்வில் மக்கள் எப்படியோ அப்படிதான் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இருப்பார்கள்.மீடியாவும் அப்படியே.தமிழகத்தில் தொலைக்காட்சிகள் மக்களுக்கு குப்பையைத்தான் நுகர கொடுத்துக்கொண்டிருக்கின்றன.திரிக்கப்பட்ட செய்திகள்,நடுநிலையற்ற பார்வைகள்,தான்தோன்றித்தனம் இவை எல்லாவற்றின் மொத்தக்கலவையாகத்தான் டிவி சானல்கள் இருந்து வருகின்றன.
விவாதங்கள் முன் முடிவுகளை வைத்தே ஆரம்பிக்கப்படுகின்றன.ஆபாசமான சினிமாப்பாடல்கள், முட்டாள்தனமான சீரியல்கள்,பாசாங்கான ரியாலிட்டி ஷோக்கள்,தொலைக்காட்சியை நடத்தும் கட்சியின் ஊதுகுழலாக செய்தி சானல்கள் இந்த களேபரத்துக்கு மத்தியில் ஒரு சிறு நம்பிக்கையாக ஒரு செய்தி சானல் வந்திருக்கிறது.அது புதிய தலைமுறை.
தெளிவான செய்திகள்,விவாதங்கள் மட்டுமல்லாமல் technology wise : way ahead.
இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாகவும் காண முடிவது வெகு சிறப்பு.
இதன் தரம் போகப்போக தேயாமல் இருக்க ஆண்டவரை பிரார்த்திப்போம்.
————————————————-
வருடா வருடம் TIME Magazine – Man of the Year அட்டைப்படத்தில் வெளியிடும்.கடந்த வருடம் facebook மொதலாளி Mark Zukkerberg.இந்த வருடம் “PROTESTER”.

TIME man of the year 2011
இந்த வருடம் தான் ஏகப்பட்ட போராட்டங்கள்.எகிப்தில் ஆரம்பித்து இந்தியா வரை.இந்தியாவிலே அட்டைக்கத்தி அண்ணா ஹஜாரே முதல் தங்கள் நிலங்களை காக்க போராடும் விவசாயிகள்,காடுகளை,வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடும் பழங்குடியின மக்கள் என போராட்டம் பல வடிவங்களில் நடக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் முல்லை பெரியார் பிரச்சனை,கூடங்குளம் அணு எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளில் மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.சூடு சொரனையற்ற அதிகார வர்க்கம் இந்த போராட்டங்களை முடிந்த வரை கொச்சைபடுத்தவும்,நீர்த்துப்போக செய்வதற்குண்டான வழிமுறைகளையும் செய்து பார்க்கிறது. ஆனால் மக்கள் சக்தி ஒற்றுமை என்கிற மிகப்பெரிய வலிமையை வைத்து போராடிக்கொண்டே இருக்கிறது.
மீடியாக்கள்,அதிகார வர்க்கம் எல்லாம் மக்களுக்கு எதிராக நின்றாலும்,மக்கள் சமுக ஊடங்கங்களின் உதவியோடு தங்கள் உரிமையை நிலை நாட்டிக்கொள்வது வரலாற்றில் புதிது.
—————————————————-
ஒரு கவிதை
கடவுள் முன்னால் ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை திறந்து நிற்கிறாள் அந்த சிறுமி . தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்கிறாள் அம்மா. சாமி தப்பு செஞ்சா நானும் சாமி கண்ணை குத்துவேன் என்கிறாள் சிறுமி கடவுள் சற்றே பயந்து பின்வாங்குகிறார்.
| Print article | This entry was posted by admin on December 15, 2011 at 9:48 am, and is filed under Uncategorized. Follow any responses to this post through RSS 2.0. You can leave a response or trackback from your own site. |
