விண்ணைத்தாண்டி வருவாயா – காதலின் பெரும் துயரம்
காதலின் அவஸ்தை,காதல் கொடுக்கும் வலி தாங்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.எத்தனையோ வாழ்வியல் மாற்றங்கள் வந்தபோதும்,தொழில்நுட்பம் வளர்ந்திருந்தபோதும் காதல் மட்டும் மாறாமல் இருக்கிறது.
இந்த உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸ்ஸிய காதலிச்சேன்?
இது தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் முதல் வசனம்.அதன் பிறகு திரையில் விரிவது ஒரு மூன்று மணி நேர மாயாஜாலம்.ஜெஸ்ஸி,கார்த்திக் என்ற யாரோ இருவரின் வலி மிகுந்த காதல்.
பெங்களூரு PVRல் நள்ளிரவு காட்சி முடிந்து வெளியே நடந்து வரும் போது,ஏதோ மனம் ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை உணர முடிந்தது.பொறியியல் படித்துவிட்டு திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் தமிழ் இந்து பையனுக்கும்,Program analystஆக இருக்கும் மலையாளி கிருஸ்தவ பெண்ணுக்கும் இடையில் இருக்கும் காதல்,மோதல் பிரிவுதான் kathai.மிக மிக பார்த்து சலித்த இந்த கதைக்கரு எப்படி ஒரு உயர்தர சினிமாவாக உருவாகியிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.
வழக்கம்போல் ஜெஸ்ஸியை பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது கார்த்திக் பையனுக்கு.
இயக்குனர் கொளதம் மேனன் திரைக்கதை மிக மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது.தன் வாழ்க்கையின் மிக அற்புதமான கணங்களை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இந்தப்படத்தில் சிம்புவும் திரிஷாவும் செய்திருப்பது ஒரு மாயாஜாலம்.அவர்கள் career ல் உச்சபட்ச நிலை.

| Print article | This entry was posted by admin on March 12, 2010 at 2:19 am, and is filed under Cinema, My Movies. Follow any responses to this post through RSS 2.0. You can leave a response or trackback from your own site. |

